2000-ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டபின், பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, உச்சத்தைத் தொட்ட நடிகையானார். தற்போது தன்னுடைய 20-ஆண்டு கால நினைவுகளை "அன்ஃபினிஷ்ட்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வருகிறார். "என்னுடைய வாழ்க்கை இன்னும் முடியவில்லை. சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை ஒரு சாதாரண பெண் என்ற கோணத்தில் பார்க்க விரும்புகிறேன். வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்காத சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை. அவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே, நான் எழுதும் புத்தகத்திற்கு "அன்ஃபினிஷ்ட்' என்று தலைப்பிட்டுள்ளேன்'' என்கிறார் பிரியங்கா சோப்ரா.