ஏற்கெனவே "மாணிக்யா', "விஸ்மயா' ஆகிய கன்னட படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், மீண்டும் கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் "ரணம்' என்ற படத்தில் சிபிஐ பெண் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். இவருடன் புரட்சியாளராக சேத்தன் மற்றும் என் கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக சிரஞ்சீவி சர்ஜா ஆகியோரும் நடிக்கின்றனர். வரலட்சுமி பங்கேற்ற சண்டை காட்சிகள் சமீபத்தில் தொடர்ந்து 9 நாள்கள் படமாக்கப்பட்டன. இது வரலட்சுமி நடிக்கும் மூன்றாவது கன்னடப் படமாகும்.