15- ஆண்டுகளுக்கு முன் விக்ரமுடன் "காதல் சடுகுடு' படத்தில் நடித்த பிரியங்கா, கன்னடத்தில் நடிக்கும் போது உபேந்திராவை திருமணம் செய்து கொண்ட பின், சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
அண்மையில் மீண்டும் கன்னடத்தில் தயாரிக்கப்படும் படமொன்றில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடிக்கிறாராம். "இந்தப் படத்தில் பிற்பகுதியில் எனக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். முதன்முறையாக புதுமையான பாத்திரத்தில் நடிக்கும் என்னுடன் அரவிந்த் சாமியும் நடிக்க வாய்ப்புள்ளது'' என்கிறார் பிரியங்கா உபேந்திரா.