மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள பெண்களின் பிரச்னை குறித்து முன்னாள் இந்திய பிரதமர் நேருவிடம் விவாதித்த பெண் ஒருவரின் கதையை மையமாக வைத்து "ஹீரா மண்டி' என்ற பெயரில் படமெடுக்க விரும்பிய சஞ்சய் லீலா பன்சாலி, இதில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஏற்கெனவே இதே தலைப்பை வேறொருவர் பதிவு செய்திருந்ததால் எழுந்த பிரச்னையால் படத்தின் தலைப்பை "கங்குபாய்' என பன்சாலி மாற்றினார். இதற்குள் பிரியங்கா படத்திலிருந்து விலகவே ஏற்கெனவே அலியாபட்டிடம் வாங்கியிருந்த தேதிகளை பயன்படுத்தி பிரியங்காவுக்கு பதில் அலியாபட்டை வைத்து "கங்குபாய்' படத்தை எடுத்து முடிக்கும் அவசரத்தில் இருக்கிறார் பன்சாலி.