"அண்மையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (இஸ்ரோ) ஆய்வு குறித்த புத்தகமொன்றை படித்தேன். அங்கு பணியாற்றும் நான்கு பெண் விஞ்ஞானிகள் பற்றிய ஆவணப் படத்தையும் பார்த்தேன். இது குறித்து என்னுடைய பாராட்டுதலை இஸ்ரோவுக்கு தெரிவித்ததோடு, செவ்வாய் கிரக பயணத்தைப் பற்றிய "மிஷன் ஓவர் மார்ஸ்' என்ற படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். என்னால் செவ்வாய் கிரகத்துக்குப் போக முடியாவிட்டாலும், நம் இந்திய விஞ்ஞானிகளின் சாதனை, இந்திய மக்களிடையே சென்றடையும் வகையில் படமெடுக்க உள்ளேன்'' என்று கூறியுள்ளார் ஏக்தா கபூர்.
-அருண்