முதன்முதலாக பிரியதர்ஷனின் "கீதாஞ்சலி' என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், மீண்டும் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகும் "மரக்கார்: அரபிகடலிண்டே சிம்மம்' என்ற படத்தில் நடிக்கிறார். "என்னுடன் மோகன்லால் மகன் பிரணவ், பிரியதர்ஷன் மகள் கல்யாணி, என்னுடைய தங்கை ரேவதி ஆகியோருடன் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடிப்பது ஒரு குடும்பத்துடன் நடிப்பது போலிருக்கிறது'' என்று கீர்த்தி சுரேஷ் சொல்ல, பிரியதர்ஷனோ, ""கீர்த்தி சுரேஷ் முதல் படத்தில் காட்டிய அதே ஆர்வத்துடன் புதுமுகம் போல் நடிப்பது, அவரது அம்மா மேனகாவின் நடிப்புத் திறமையை பிரதிபலிப்பது போலிருக்கிறது'' என்று பாராட்டியுள்ளார்.