அண்மையில் தன்னுடைய காதலன் ஆன்ட் ரூ நீ போனை விட்டுப் பிரிந்த பாலிவுட் நடிகை இலியானா டிக்ரூஸ், இருவரும் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் அவரவர் சமூக வலை தளத்திலிருந்து நீக்கிவிட்டனர். இது குறித்து இலியானா தனது வலைதளத்தில், "வாழ்க்கையில் நீங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பார்ட்னர்கள் ஆகியோரை இழக்க நேரிடலாம். ஆனால் உங்களை நீங்களே இழக்க இடம் கொடுக்க வேண்டாம். முக்கியமாக உங்கள் மீது அன்பு செலுத்த யாரும் இல்லாத சூழ்நிலையில், உங்களை நீங்களே நேசியுங்கள். அப்போதுதான் நீங்கள் தனிமையில் இல்லை என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றும்'' என்று தத்துவங்களை வெளியிட்டிருக்கிறார்.