காதலனைப் பிரிந்த ரோஜா

தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழில் "ரோஜா' தொடர் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் பிரியங்கா.
காதலனைப் பிரிந்த ரோஜா

தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழில் "ரோஜா' தொடர் மூலம் சின்னத்திரை நாயகியாக அறிமுகமாகியிருப்பவர் பிரியங்கா. "ரோஜா' தொடர் தொடங்கிய சில நாட்களிலேயே பெரும்பாலான ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டுவிட்டார் பிரியங்கா. பிரியங்கா, ராகுல் என்பவரை காதலிப்பதாகவும். சமீபத்தில் அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவரது திருமண நிச்சயதார்த்தம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரியங்கா கூறுகையில், "நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். சில காரணங்களால் எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டை எவ்வளவோ தீர்க்க முயற்சித்தோம் முடியவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் இருவருமே பிரிந்துவிட்டோம்'' என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com