எல்லாம் எதார்த்தமாக நடக்கிறது!

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி.ஜே சங்கீதா. தற்போது இவர் "அழகு' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.
எல்லாம் எதார்த்தமாக நடக்கிறது!

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி.ஜே சங்கீதா. தற்போது இவர் "அழகு' தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவி நடித்த "டிக் டிக் டிக்' படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையிலும் கால்பதித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் வாழ்க்கையில் எதையும் பிளான் செய்தது இல்லை. எல்லாமே அதுவாகவே நடக்கிறது. என்னைப் பொருத்தவரை எந்தவொரு விஷயத்தையும் பிளான் பண்ணி தோற்று போனால் அது மிக பெரிய வலியாக மாறிவிடும். அதனால் நான் எதையும் பிளான் பண்ணுவது கிடையாது. நான் ஐ.டி கம்பெனியில் பணியாற்றும்போது சின்னத்திரை தொகுப்பாளராக வருவேன் என்று எண்ணியது இல்லை. ஆனால், தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. பிறகு "அழகு' நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இப்போது நடிகையாகியிருக்கிறேன். இந்தத் தொடரில் முதலில் சாதாரணமாகவே வந்த நான் நடிக்கும் பூர்ணா கதாபாத்திரம் திடீரென்று வேறு கோணத்தில் வடிவமைக்கபட்டது அதன் பின் அப்படியே வில்லி கதாபாத்திரமாக மாற்றபட்டது இதுவும் தற்செயலாகவே நடந்திருக்கிறது'' என்று கூறினார் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com