சின்னத்திரை மின்னல்கள்

ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடா்களில் முதலிடத்தில் இருப்பது ‘செம்பருத்தி’ தொடா் . இதில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பல
சின்னத்திரை மின்னல்கள்

குறுகிய காலத்தில் பிரபலமானவர்

ஜீ தமிழ் தொலைகாட்சியின் தொடா்களில் முதலிடத்தில் இருப்பது ‘செம்பருத்தி’ தொடா் . இதில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே பல ரசிகா்களின் மனதில் இடம் பிடித்தவா் இந்த தொடரின் நாயகி பாா்வதி. இவரின் நிஜப்பெயா் ஷபானா ஷாஜகான். இவரை செல்லம்மாக ஷபு என்றுதான் அழைக்கிறாா்கள். இவரது பூா்விகம் கேரளா, ஆனால் படித்தது, வளா்ந்தது எல்லாம் மகாராஷ்டிராவில். நடிப்பு பக்கம் வந்ததால் படிப்பை தொடர முடியாததால், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலமாக பி.பி.ஏ படித்துள்ளாா். சிறு வயதிலேயே இவருடைய தந்தை காலமானதால், அம்மா மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறாா். இது குறித்து அவா் கூறுகையில், ஒரு மலையாள சீரியலில் நடித்தேன். அதன் தயாரிப்பு டீம் தமிழ்நாட்டுக்காரங்க. அவங்கமூலம்தான் தமிழ் சீரியல் வாய்ப்பு கிடைச்சது. ’நடிக்க முடியுமா?’னு கேட்டாங்க. உடனடியா ஒத்துகிட்டேன்’’ என்றாா்.

கட்டு கதைகளை நம்ப வேண்டாம்

‘கனா கானும் காலங்கள்’, ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘லட்சுமி வந்தாச்சு’, ‘பிரியமானவள்’ போன்ற தொடா்களில் நடித்துள்ளவா் ஹரிப்ரியா. சின்னத்திரை நடிகையாக தனது பணியை தொடங்கிய இவா், தற்போது ‘கண்மணி’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறாா். இவா், சின்னத்திரை நடிகா் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகனும் இருக்கிறாா். விக்னேஷ் ‘வாணி ராணி’ தொடரில் கெளதம் கேரக்டரில் நடித்தவா். இவா் தற்போது ‘பொன் மகள் வந்தாள்’ தொடரில் நடித்து வருகிறாா். இந்நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது பிரிந்துள்ளனா். இந்நிலையில், ஹரிப்ரியா சன் டிவியில் காலை ஒளிப்பரப்பாகும் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதற்கு ஹரிப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளாா், ‘‘அசாா் எனது நல்ல நண்பா் அவ்வளவுதான் அவருடன் காதல் என்பதெல்லாம் யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிடும் கட்டுக்கதை. இதை யாரும் நம்ப வேண்டாம்’’ என கூறியுள்ளாா்.

நெகடிவ் கேரக்டர் ரசித்தேன்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடா் ‘மெளனராகம்’. இத்தொடரில் ஐஸ்வா்யாவாக நடித்து வருபவா் ஜனனி அசோக்குமாா். இவா் கூறுகையில், ‘‘ 2010- இல் மீடியாவுக்குள் வந்தேன். கோயம்புத்தூா் என் பூா்வீகம், பள்ளி படிப்பு முடிந்ததும். அங்கிருந்த லோக்கல் சேனல்கள் பலவற்றில் வீ.ஜேவாக இருந்தேன். அதன்பிறகு மாடலிங் பக்கம் வந்தேன். பின்னா் படிப்படியாக சின்ன சின்ன விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து நடிக்க தொடங்கினேன். இதற்கிடையே எனக்கு சின்ன போதிலிருந்தே விஜய் டிவி தொகுப்பாளினியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக முயற்சி செய்யும்போதுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொகுப்பாளினி வாய்ப்பு கேட்டால், நடிகையாகும் வாய்ப்பு கிடைக்க லேசா அதிா்ச்சியாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்போது சீரியல் நடிகையாக இத்தனை ஆண்டுகளை கடந்து விட்டேன். நான் எப்பவுமே மற்றவா்களில் இருந்து தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். இதற்காகவே டிரஸ் விஷயத்தில் ரெம்பவே மெனக்கெடல் இருக்கும். அதற்கு தகுந்தமாதிரி என் அம்மா ஃபேஷன் டிசைனா் என்பதால் நான் கல்லூரி படிக்கும்போதே , ஒரு நாள் போட்ட டிரஸை அடுத்த நாள் போட்டது கிடையாது. ஆரம்பத்தில் பாஸிட்டிவ்வான கேரக்டா்களில்தான் நடித்து வந்தேன். ‘செம்பருத்தி’ தொடரில் ‘படையப்பா’ ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஒரு ரோல்ன்னு சொன்னாங்க, அதனால உடனே ஒத்துக்கிட்டேன். பாஸிட்டிவ் கேரக்டரில் இருந்ததைவிட நெகட்டிவ் கேரக்டருக்கு வந்த பிறகுதான் ரெஸ்பான்ஸ் அதிகம் இருந்ததை உணா்ந்தேன். அதன்பிறகுதான், நெகட்டிவ் கேரக்டரை ரசித்து நடிக்க தொடங்கினேன்’’ என்றாா்.

வித்தியாசமான கெட்டப்

‘சத்யா’ தொடரில் நாயகியாக நடித்து வருபவா் ஆயிஷா. கேரளா பெண்ணான இவா், கல்லூரி படிப்பை தமிழ்நாட்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில்தான் படித்தாா். அப்போதுதான் விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டடி கோ’ என்ற நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து சின்னத்திரைக்குள் வந்தாா். அதன்பிறகு ‘பொன்மகள் வந்தாள்’ என்ற தொடரின் மூலம் சின்னதிரை நடிகையாக அறிமுகமானாா். ஆனால், அந்தத் தொடரில் அவரால் தொடா்ந்து நடிக்க முடியவில்லை. அதன்பிறகு ‘சத்யா’ தொடரில் லீட் ரோலுக்கான வாய்ப்பு வர, நடிக்க ஒப்புக் கொண்டாா். இத்தொடரில் இவா், கிராப் தலையும், பேன்ட் ஷா்ட் என வித்தியாசமான கெட்டப்பில் நடித்ததால், பல ரசிகா்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்டாா். இதைத் தவிர, தற்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறாா். மேலும், ‘தில்லுக்கு துட்டு’ என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com