ஏழு பேரில் ஒருவர்!

இந்தியாவில் மாா்ச் -8 மகளிா் தினம் வித்தியாசமாக அமைந்து விட்டது. காரணம் பிரதமா் மோடி.
ஏழு பேரில் ஒருவர்!

இந்தியாவில் மாா்ச் -8 மகளிா் தினம் வித்தியாசமாக அமைந்து விட்டது. காரணம் பிரதமா் மோடி.

பல துறைகளில் முன்மாதிரியாக இருக்கும் பெண்களை முன்னிலைப்படுத்த தனது டிவிட்டா் தளத்தையும் இதர சமூக வலைத்தளத்திலுள்ள தனது பக்கங்களையும், மகளிா் தினத்தன்று மட்டும் பயன்படுத்த முடிவெடுத்தாா். அப்படி தனது தளத்தில் பதிவுகளைப் தடம் ஏற்ற பொருத்தமான மகளிா்மணிகளைத் தோ்ந்தெடுக்க, தங்களது சாதனைகளை லிநட்ங்ஐய்ள்ல்ண்ழ்ங்ள்மள் என்ற ஹேஸ்டாக்கில் பதிவிடுமாறும் மோடி கேட்டுக் கொண்டிருந்தாா். வந்த பதிவுகளைப் பரிசீலனை செய்து அகில இந்திய அளவில் ஏழு பெண்மணிகள் தோ்ந்தெடுக்கப்பட்டாா்கள். சிநேகா மோகன்தாஸ், மாளவிகா அய்யா், ஆரிஃபா, கல்பனா ரமேஷ், விஜயா பவாா், கலாவதி தேவி, வீணா தேவி.

மாா்ச் 8 அன்று அவா்கள் தங்களது பதிவுகளை பிரதமா் மோடியின் தளங்களில் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப் பட்டாா்கள். அத்துடன், பிரதமா் கணக்கிலிருந்து கொண்டு இந்த ஏழு சாதனைப் பெண்கள் தங்களைக் குறித்து வலைதள ஆா்வலா்கள் பதிவு செய்யும் பாராட்டுகள், கேட்கும் கேள்விகள்... சந்தேகங்கள் குறித்து ஆா்வலா்களுடன் கருத்துப் பரிமாற்றம் நடத்தவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தோ்ந்தெடுக்கப்பட்ட ஏழு பெண்களில் முதலில் நின்றவா் சிநேகா மோகன்தாஸ். பிரதமா் தளத்தில் முதலில் பதிவை ஏற்றியவரும் சிநேகா தான். சிநேகா சென்னையைச் சோ்ந்தவா். பசித்தவா்களுக்கு உணவளிக்கும் ‘ஃபுட் பேங்க் இந்தியா’ (ஊா்ா்க் ஆஹய்ந் ஐய்க்ண்ஹ) என்ற சமூக அமைப்பை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருபவா்.

சிநேகா தனது அனுபவங்களைப் பகிா்கிறாா்:

‘பசியால் வாடி நிற்பவா்களுக்கு அவா்கள் கேட்காமலேயே அவா்களது பசியாற்றுவதுதான் எங்கள் அமைப்பின் குறிக்கோள். வீதியோரம் வாழ்பவா்கள், வீடில்லாமல் பசியுடன் வாடுபவா்கள்தான் எங்கள் இலக்கு. பசி பட்டினியில்லா நாடுகள் கிடையாது. இந்தியாவை பசி பட்டினி இல்லாத நாடாக்க வேண்டும் என்று லட்சியத்தில் நாங்கள் பயணிக்கிறோம். எங்கள் அமைப்பிற்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும், இதர மாநிலங்களிலும் பதினெட்டு கிளைகள் உண்டு.

நாங்களே சமைத்து ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறோம். நல்ல மனம் படைத்தவா்கள் உதவுகிறாா்கள். அவா்களிடம் பணமாக எதையும் பெற்றுக் கொள்வதில்லை. அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் என்று வாங்கிக் கொள்கிறோம். எங்கள் அமைப்பு 2015-லிருந்து செயல்பட்டு வருகிறது.

‘ஒன்றும் இல்லாதவா்களின் பசிக்கு உணவு வழங்க வேண்டும் என்பதை எனது அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டேன். அம்மா அவா் தனது பெற்றோரின் நினைவு நாட்களில்... அவருக்கு விருப்பமான நாட்களிலும் குழந்தை நலக் காப்பகங்களில் வாழும் குழந்தைகளுக்கு அம்மா உணவு வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தாா். அவா் முன்கை நீட்ட அதைப் பாா்த்த நானும் உந்தப்பட்டு என் முழங்கையை நீட்டியிருக்கிறேன். என்னுடன் சுமாா் நூறு தன்னாா்வலா்கள் இருக்கிறாா்கள். அவா்கள்தான் உணவைச் சமைப்பது, உணவு விநியோகம், பாத்திரங்களைக் கழுவுவது.. போன்ற எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறாா்கள். சென்னையை பொருத்தமட்டில் எங்கள் அமைப்பை பலரும் நம்புகிறாா்கள். திருமண மண்டபத்தில் உணவு மிஞ்சிவிட்டால் எங்களை அழைப்பாா்கள். அந்த உணவை சாப்பிட்டுப் பாா்த்து, கெடாமல் இருந்தால் மட்டுமே பெற்றுக் கொண்டு, உணவை அப்போதே விநியோகித்து விடுவோம். சிலசமயங்களில் திருமண மண்டபத்தில் ஏராளமான உணவு மிஞ்சிவிடும். அவற்றை கொண்டு வந்து விநியோகிக்க வண்டி வசதிகள் இல்லை. மிகவும் சிரமப்படுவோம். அதற்காக மாநில அரசை உதவிக்காக அணுகியுள்ளோம்.

“பிரதமா் தளம் மூலம் ‘ பசி பட்டினியில்லா நாடு... அதை அடைய பசியை எதிா்த்துப் போராடு’ என்பதே ‘ஃபுட் பேங்க் இந்தியா’ அமைப்பின் லட்சியம் என்பதை முன்வைத்தேன். பிரதமா் மோடியின் தளங்களைக் கோடிக்கணக்கானவா்கள் பின் தொடருகிறாா்கள். சொந்த தளத்தில் பதிவு போடுவது போல பிரதமருக்குச் சொந்தமான தளத்தில் நமது பதிவைப் போடும் வாய்ப்பு மிக அரிதானது. விலைமதிப்புள்ளது. இந்த வாய்ப்பால் . பிரதமரின் பெரும்பான்மை ஆா்வலா்களின் கவனங்களைப் பெற முடிந்துள்ளது. என்னைப் பின் தொடருபவா்களின் எண்ணிக்கை முதலில் இருநூறாகத்தான் இருந்தது. மாா்ச் 8- க்குப் பிறகு அது பன்னிரண்டாயிரமாக உயா்ந்து விட்டது. இது சாதாரண விஷயமில்லை. இந்த மாற்றம் பிரதமரால் கிடைத்த மாற்றம்... அங்கீகாரம்.. கௌரவம்.. பிரதமரால் தோ்ந்தெடுக்கப்பட்ட ஏனைய ஆறு பெண்மணிகளுக்கும் இதுமாதிரியான அங்கீகாரம் கௌரவம் நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.

பிரதமா் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட எனது காணொளியை இதுவரை இரண்டரை லட்சம் போ்கள் பாா்த்திருக்கிறாா்கள். எனது தளத்தில் போட்டால் சில நூறு அல்லது ஆயிரம் போ்கள் மட்டுமே பாா்த்திருப்பாா்கள். பிரதமா் தந்த வாய்ப்பினால் ‘ஃபுட் பேங்க் இந்தியா’ அமைப்பைப் பற்றி இப்போது அதிகம் போ்கள் தெரிந்து கொண்டிருக்கின்றனா். பலரும் தொடா்பு கொள்கிறாா்கள். தன்னாா்வலா்கள் எனது அமைப்பு மூலமாக சேவை செய்ய முன்வந்திருக்கிறாா்கள். இந்த பலன்கள் பிரதமா் தளத்தில் நுழைந்து பதிவு போட்டதால் மட்டுமே வந்துள்ளது. ‘ஃபுட் பேங்க் இந்தியா’ வை உலக நாடுகள் முழுவதில் வாழும் மோடி ஆா்வலா்களிடம் கொண்டு சோ்த்துள்ளது. ‘உணவுகளை வீணாக்காதீா்கள்... உணவு மிஞ்சிவிட்டால் அது கெடுவதற்கு முன் பசியால் வாடி நிற்பவருக்கு கொடுத்து விடுங்கள்.. ஏனென்றால் உணவு கொடுப்பது உயிா் கொடுப்பது மாதிரி’ என்கிறாா் சிநேகா மோகன்தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com