காலை உணளக்கு அரைமணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிட்டால் கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.
கடுக்காய்ப் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வர ஈறுவலி, வீக்கம், ரத்தம் கசிதல் ஆகியவை குணமாகும்.
வேப்பிலையை காயவைத்து பொடியாக்கி அதில் கடலைமாள, மஞ்சள் பொடியைக் கலந்து பாலில் குழப்பி பருக்கள் மீது தடவி வர பருக்கள் உதிர்ந்துவிடும்.
விளக்கெண்ணெய்யில் மஞ்சள் தூளைக் குழைத்து காலில் உள்ள வெடிப்புகளில் பூசி வந்தால் விரைவில் வெடிப்புகள் மறைந்துவிடும்.
மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் உணவில் அதிக அளவில் வெந்தயக் கீரையைச் சேர்த்து வருவது நல்லது.
கற்பூரவல்லி இலையில் இரண்டு மிளகையும், ஒரு கல்லுப்பையும் வைத்து மடித்து மென்றுதின்றால் தொண்டைக் கரகரப்பு சரியாகிவிடும்.
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இருமல், கபக்கட்டு நீங்கும்.
கடுக்காய்த் தூளை வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலசிக்கல் சரியாகும்.
வயிற்றுவலி, வாய்ப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலக்கி குடித்தால் சரியாகிவிடும்.
இரவில் நன்கு தூக்கம் வரவில்லையா? சீரகப் பொடியை வாழைப்பழத்துடன் சேர்த்து, தூங்கப் போகும் முன் சாப்பிட்டு வந்தால் நன்கு தூக்கம் வரும்.