சுட்டெரிக்கும் வெயில் தொடங்கிவிட்டதால், வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்வது நல்லது.
காலையில் எழுந்ததும் சிறிதளவு இளநீரை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பொலிவாகும்.
வெயில் காலங்களில் முகத்தை அதிக முறைகள் சோப்புப் போட்டு கழுவக் கூடாது.
லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவை வெளிர் நிறங்களில் இருப்பது மிக நல்லதாகும்.
வெள்ளரிச்சாறுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தேய்த்து ஊறிய பின் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கும்.
தர்ப்பூசணிப்பழச் சதையை முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகம் பளபளப்பாகும். முகம் குளிர்ச்சியாகும்.
வெயில் காலங்களில் அதிக அளவில், கெட்டியாக பவுடர் மற்றும் மேக்கப் போட வேண்டாம்.