சர்வதேச பெண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியின் துவக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பிடித்த "கேட்ச்' உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய போது, எதிர் அணி அடித்த சிக்சரை, ஹர்லீன் கடைசி நேரத்தில் பிடித்து, எல்லைக் கோட்டுக்கு மேலே வீசி, நிலை தடுமாறி எல்லைக் கோட்டிற்கு வெளியே விழுந்தார். ஆனால் மறு நொடியே, வீருக் கொண்டு எழுந்து பந்து கீழே விழுவதற்குள் மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் பாய்ந்து அதை கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். இதன்மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஹர்லீன் தியோல்.