தில்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக கர்ணம் மல்லேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். 21 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார் மல்லேஸ்வரி. இதன்மூலம், ஒலிம்பிக்கில் பளூ தூக்கும் போட்டிக்காக இந்தியா சார்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
- ஆர்.ஜெயலட்சுமி