சேனைக்கிழங்கு குருமா தேவையானவை:
சேனைக் கிழங்கு- 200 கிராம்
1 வெங்காயம் -1
மஞ்சள் தூள் -1/2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய்- 2
மல்லித்தூள்- 1 மே.க
இஞ்சி பூண்டு விழுது- 1 மே.க
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
மல்லி இலை (விரும்பினால்)
அரைக்க:
தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி
கசகசா- 1 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் (விரும்பினால்) - 1 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
பிரியாணி இலை- 1
பட்டை - 1
ஏலக்காய்- 1
கிராம்பு -1
செய்முறை:
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் ஒரு சத்தம் வரை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும். வேக வைத்த சேனைக் கிழங்கு மிளகாய் , மல்லித் தூள், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் விழுது, தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் குருமாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வெளி வரும் வரை வேக விடவும். மல்லி இலை தூவி இறக்கிவிடவும். சேனைக் கிழங்கு குருமாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதமுடன் பரிமாறலாம்.