மகளிர்மணி
முள்ளு முருங்கை தோசை
முள்ளு முருங்கை இலையைக் கழுவி வைக்கவும். இட்லி அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் அரிசி, சீரகம், முள்ளு முருங்கை இலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
தேவையானவை:
முள்ளு முருங்கை இலை - 15
இட்லி அரிசி - 1 கிண்ணம்
சீரகம் -அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முள்ளு முருங்கை இலையைக் கழுவி வைக்கவும். இட்லி அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் அரிசி, சீரகம், முள்ளு முருங்கை இலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தைக் கலந்த சிறிது நேரம் வைத்திருந்து கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வார்க்கவும். வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.