துனிசியாவின் முதல் பெண் பிரதமராக நஜ்லா பவுதென் ரோம்தானே நியமிக்கப்பட்டுள்ளார். இயற்பியல் அறிஞரான இவர், இதுவரை அரசியலில் இருந்ததில்லை. கடந்தவாரம் துனிசியாவின் அதிபர் சையது, நஜ்லாவைச் சந்தித்தபோது, இது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. பின்னர், வெளிவந்த அதிபர் அலுவலக அறிவிப்பில்தான் இந்த தகவல் வெளியாகி, பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.