தேவையானவை:
கடுகு எண்ணெய் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - கால் கிலோ
தனியா - 1 தேக்கரண்டி
சோம்பு - ஒன்றரை தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
தனியா, சோம்பு, வெந்தயம், கடுகு, சீரகம், உப்பு இவைகளை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் கலந்துக் கொள்ளவும். மிளகாயின் நடுவே கீறி, கலந்து வைத்துள்ள மசாலாக் கலவையை நிரப்பவும். மீதமுள்ள எண்ணெய்யை மிளகாய் மீது விட்டு 3-4 நாள்கள் ஊற விடவும். நன்கு ஊறிய பின்னர், எடுத்து பரிமாறவும்.