எலுமிச்சை பழம் உலர்ந்து விட்டால் கொதிக்கின்ற நீரில் ஐந்து நிமிடம் போட்டு வைத்து பிறகு எடுத்து சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
கடலை மாவுக்குப் பதிலாக ஒரு கிண்ணம் பச்சரிசியும், ஒரு கிண்ணம் பச்சை கடலை பருப்பும் கலந்து மிக்ஸியில் நைஸாக அரைத்து அதில் உப்பு, காரம் சேர்த்து பஜ்ஜி செய்தால், பஜ்ஜி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் ருசியாக இருக்க அதில் கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான இருக்கும்.
புதினா அதிகமாக இருந்தால், வெயிலில் காய வைத்து, அதனுடன் உப்பு, சீரகம் சேர்த்து பொடியாக்கி பிரிட்ஜில் வைத்துக் கொண்டு, அந்தப் பொடியை தேவையானபோது தயிரில் போட்டால், திடீர் தயிர் பச்சடி தயார்.