தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு 100 கிராம்
முருங்கைக் கீரை 100 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் முருங்கைக் கீரை, முந்திரிப் பருப்பு, சோம்பு, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தெளித்து பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் பகோடா மாவை கிள்ளிப் போட்டு மொறுமொறுவென வெந்த நிலையில் எடுக்க வேண்டும்.