தேவையான பொருள்கள்:
நறுக்கிய பிரண்டைத் துண்டுகள்- 1 கிண்ணம்
தக்காளி-1
சின்ன வெங்காயம்- கால் கிண்ணம்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த் துருவல் - கால் கிண்ணம்
எண்ணெய்- 30 மில்லிஹமிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத் தூள்- 1 தேக்கரண்டி
சீரகத் தூள்- கால் தேக்கரண்டி
மிளகுத் தூள்- சிறிதளவு
புளி- சிறிதளவு
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
செய்முறை:
முதலில் வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர், சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பிரண்டைத் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். நன்றாக ஊற்றி மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். புளிவாசனை போய் குழம்புப் பதம் வந்தவுடன் அதில் துருவி வைத்துள்ள தேங்காய்த் தூள் போட்டு சிறிது நேரத்தில் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.