அழகுக் குறிப்புகள்...

எலுமிச்சை காயை தலையில் தடவி பிறகு  ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி அழகாய் இருக்கும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எலுமிச்சை காயை தலையில் தடவி பிறகு ஷாம்பு போட்டு குளித்தால் தலைமுடி அழகாய் இருக்கும்.

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி பின்னர் குளித்தால் மேனி பளபளப்பாகும்.

ஆரஞ்சு சாற்றை முகத்தில் பூசி பத்து நிமிடங்கள் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

மோரைப் பஞ்சில் தோய்த்து முகம், கழுத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.

பீட்ருட்டை வெட்டி அதன் சாற்றை  உதடுகளில் தேய்த்து  வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளரிச்சாறுடன் ஆப்பிள் சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி வர ஒவ்வாமையால் முகத்தில் ஏற்படும் அலர்ஜி நீங்கிவிடும்.

வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறை அகலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com