முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால், அதன் மணம் மாறாமல் இருக்கும்.
கொத்துமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாகத் தண்ணீரில் அலசி காய வைத்து, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால், அதிக நாள்கள் கெட்டுப் போகாது.
தேங்காய்க்குப் பதிலாக, வேர்க்கடலை, முந்திரி போட்டு சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
துவரம் பருப்பை வேக வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் கலந்தால், சாம்பார் சிவப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
பொடியாக நறுக்கிய பாகற்காயோடு சீரகம், மிளகு, உப்பு கலந்து சூப் செய்யலாம்.
வெந்த உருளைக் கிழங்கின் மேல் பயத்தம் மாவை பூசி செய்யும் பொரியல் பிரமாதமாக இருக்கும்.
அப்பம் செய்யும்போது, அரிசி மாவுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து செய்தால், அப்பம் மொறுமொறுவென்று நல்ல சுவையாக இருக்கும்.