தேவையான பொருள்கள்:
முற்றிய வாழைக்காய்- 2
மஞ்சள் தூள்- கால் தேக்கரண்டி
புளி- கொட்டைப் பாக்கு அளவு
தனியா- 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்- 4
பெருங்காயத் தூள்- சிறிது
கடுகு- கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய்- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் இரண்டாக வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்கக் கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நறுக்கிய வாழைத் துண்டுகளைப் போட்டு வேக வைத்து வடித்துகொள்ளவும். தனியா, கடலைப் பருப்பு, உளுந்துப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை சிறிது எண்ணெயில் வறுத்து, கரகரப்பாக அரைத்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலையை தாளித்து வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். இறக்குவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் அரைத்த பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும்.