இவன் பெயர் ரோபோ என்பதுவாம்!
உயிரே இல்லாத மனிதன் இவன்
உலகம் முழுவதும் உதவுகிறான்!
நெருப்பில் நடந்து சென்றிடுவான்
நீரையும் கடந்து வந்திடுவான்!
மனிதன் படைத்த மனிதன் இவன்
மனிதனைக் கூட விஞ்சிடுவான்!
இவனுக்குப் பசியே கிடையாது
விருப்பும் வெறுப்பும் தெரியாது!
ஓய்வே இல்லா மனிதன் இவன்
ஓடி ஆடியே உழைத்திடுவான்!
களைப்புச் சிறிதும் அடையாமல்
கடமையை எளிதாய் முடித்திடுவான்!
மனத்தில் தோன்றும் உணர்ச்சிகளை
முகத்தில் அழகாய் காட்டிடுவான்!
மாபெரும் படைப்பாய் ரோபோவும்
மனித மூளையால் இயங்கிடுவான்!