அஞ்சாநெஞ்சன், மாவீரன், வெற்றி வீரன், முடியாதது என்று ஒன்றுமில்லை என்று கூறியவர் என்றெல்லாம் போற்றப்படுபவர் நெப்போலியன் போனபார்ட். அவரது நினைவாற்றல் குறித்து அவரே கூறியது:
""என் மூளை, மேலும் கீழும் வரிசையாக அமைக்கப்பட்ட இழுப்பறைகள் போன்றது. ஓர் இழுப்பறையைத் திறந்தால் ஏனையவை தாமாகவே மூடிக் கொள்ளும்.
இப் பயிற்சியை எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டேன். அதனால் ஒரு பொருளைப் பற்றிச் சிந்திக்கும்போது ஏனைய பொருட்கள் என் நினைவில் குறுக்கிடுவதில்லை. இதனால் எப்பொருளிலும் என்னால் முழுக் கவனம் செலுத்த முடிகிறது!''