அறிவியல் ஜோக்!

சாப்பிட்டு வந்து ஆராய்ச்சியைத் தொடரலாமே!'' என்றார்.

அவர் ஒரு விஞ்ஞானி. உணவை மறந்து தீவிரமாக ஓர் ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தார். அருகில் சென்ற அவரது மனைவி, ""சாப்பிட்டு வந்து ஆராய்ச்சியைத் தொடரலாமே!'' என்றார்.
 ""நீ படிக்காத பட்டிக்காடு. விஞ்ஞானத்தைப் பற்றி உனக்கென்ன தெரியும்? போ, அந்தப் பக்கம்...'' என்று விரட்டினார் விஞ்ஞானி.
 ""சாப்பாடு, தண்ணீரை மறந்து அப்படி ஆராய்ச்சி செய்து எதைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டார் மனைவி.
 ""எந்தப் பொருளையும் கரைக்கக் கூடிய திரவத்தைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்'' என்றார் விஞ்ஞானி, பெருமையுடன்.
 ""கண்டுபிடிக்கும் திரவத்தை எந்தப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கப் போகிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் அந்த மனைவி அப்பாவித்தனமாக...
 -ஆர்.தீனதயாளன், காரமடை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com