சுதந்திரத் திருநாள்!

படர்ந்திடத் துயரே வெள்ளைப்பரங்கியர் அளித்தார் தாமேதடமது புரியா நாளும்தவிப்பினில் கிடந்தோம் அன்று!
சுதந்திரத் திருநாள்!

படர்ந்திடத் துயரே வெள்ளைப்

பரங்கியர் அளித்தார் தாமே

தடமது புரியா நாளும்

தவிப்பினில் கிடந்தோம் அன்று!

துடிப்புடன் எழுந்தார் பல்லோர்!

துலங்கிட நலமே ஈங்காம்

சுடர்விட்ட தியாகத்தாலே

சுதந்திரம் கிடைக்கப் பெற்றோம்!

சிதம்பரம் இழுத்தார் செக்கை

சிறைதனில் இடர்கள் உற்றே

கொடியதாம் தொழுநோய் பற்ற

வாடினார் சிவாவும் கூட

சதிராடி குமரன் தாமும்

சீர்கொடி சுமந்தே சாய்ந்தான்!

சதமென அறப்போர் செய்தே

சுதந்திரம் அடைந்தோம் நாமே!

அன்னியரெல்லாம் நம்மை

அடிமையாய் நடத்தினாரே...

அடிதடி பலவும் ஏற்று

ஆற்றொணாத் துயரம் ஈந்து

கெடுதலைக் களைய வேண்டி

காந்திஜி தலைமை ஏற்க...!

சடுதியில் விளைந்ததன்று...,

சுதந்திரம் நமக்கு இன்று!

மூவண்ணக் கொடியை ஏற்றி,

மாமனிதர் பதமே போற்றி,

ஆவலோடனைவரும் கூடி

அழகாக ஆடிப்பாடி

மேவியிங்கு மகிழ்வில் துள்ளி

மனமதுவாம் மலர நின்று

தேவி நம் பாரதத் தாயின்

திருவடி தொழுதிடு வோமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com