ஒரு முறை சாக்ரடீஸிடம், ஒரு சிறுவன், ""எனது கைக்குள் இருக்கும் பூச்சி உயிரோடு உள்ளதா? அல்லது செத்து விட்டதா?'' என்று கேட்டான். (செத்து விட்டது என்று கூறினால் அதை பறக்க விட்டுவிட வேண்டும்..., உயிரோடு இருக்கிறது என்று கூறினால் அதை கைக்குள்ளேயே நசுக்கிக் கொன்று விட வேண்டும் என்பது அவன் திட்டம்!)
இதைப் புரிந்து கொண்ட சாக்ரடீஸ், ""சிறுவனே அந்தப் பூச்சி சாவதும், உயிரோடு இருப்பதும் உன் கையில்தான் இருக்கிறது!'' என்றார்! சிறுவன், பூச்சியைப் பறக்கவிட்டுவிட்டு சாக்ரடீûஸக் கட்டிக் கொண்டான்!