மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு கர்நாடக இசையில் ஈடுபாடு அதிகம்! பிரபல எழுத்தாளர் "எல்லார்வி' இல்லத் திருமணவிழாவிற்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்! அங்கு லால்குடி "ஜெயராமன்' வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்! அதனை ரசிக்க அருகில் சென்றார் எம்.ஜி.ஆர்! ரசிகர்களின் கூட்டத்தால் மிகுந்த சலசலப்பும், ஆரவாரமும் அங்கு எழுந்தது! வயலின் இசை சலசலப்பில் கரைந்து போய்விட்டது! எம்.ஜி.ஆரும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்! பிறகு லால்குடி ஜெயராமனுக்கு ஒரு கடிதம் வந்தது! அதில், ""நான் வந்தபோது எனது ரசிகர்களால் மிகுந்த சலசலப்பு ஏற்பட்டது..., தங்கள் இசை நிகழ்ச்சிக்கும் மிகுந்த இடையூறு ஏற்பட்டது! அதற்காக நான் வருந்துகிறேன்'' என்று எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர்!