அக்னி ஏவுகணை சோதனை நடந்த 1989-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதிக்கு முதல் நாள் அப்போதைய பாதுகாப்புத் துறை மந்திரி கே.சி.பந்த் ஏ.பி.ஜே.அப்துல்கலாமிடம், "உங்கள் ஏவுகணை திட்டத்தின் வெற்றியைக் கொண்டாட என்ன செய்யலாம்?' என்று கேட்டார். உடனே அப்துல் கலாம் கேட்டது, ""இம்ராத் ஆய்வு மையத்தில் நடுவதற்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் கொடுங்கள்'' என்றார்.