குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் வினோபாவைச் சந்தித்தபோது வினோபா தனது ஆசிரமத்தில் தோட்ட வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்! இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட இராதாகிருஷ்ணன் அவர்கள் வினோபாவிடம், ""இந்த வயதிலும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியம் என்ன?''
என்று கேட்டார். ""என்னுடைய மூன்று வேளை சாப்பாட்டிற்காக நான் உழைத்துத்தான் ஆக வேண்டும். தினசரி நான் மூன்று மணி நேரம் ஏதாவது வேலைகளைச் செய்து விடுகிறேன்.'' என்றார்.