இரு துருவங்களையும் கண்டுபிடித்த எவலின் பயர்ட் பனிக்கட்டிப் பாலைவனத்தின் நடுவே தன்னந்தனியாக நிற்கும் பொழுது, "நம்முடைய தேவைகள் எவ்வளவு குறைவாக இருக்கின்றன என்பதை அறியாததனால்தான் உலகின் அரைவாசித் துன்பங்கள் ஏற்படுகின்றன என்பது எனக்கு இப்பொழுது தெரிய வருகின்றது. நீண்ட நெடுங்காலமாக தத்துவஞானிகள் கூறிவந்த இந்த உண்மையை நான் இப்பொழுதுதான் உணர்ந்தேன்' என்று தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார்.