* முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள். கட்டளையிடும் பதவி உனக்குத் தானே வரும்.
*அறிவுச் சுரங்கத்தைத் திறப்பதற்கான திறவுகோல் மன ஒருமைப்பாடாகும்.
* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.
* துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.
* அவரவர் விதி அவரவர் கையிலே இருக்கிறது.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருத்தல் வேண்டும்.
* கோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒருபோதும் செய்வதில்லை.
* கல்வி, கல்வி, கல்வி அது ஒன்றே இப்போது நமக்குத் தேவை.
* ஆசை இருக்கும்வரை உண்மையான இன்பம் வராது.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.