ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறிவாளன் திரு.
- திருக்குறள்
ஊருணியில் நீர் நிறைந்தால்
ஊருக்கெல்லாம் பயன்படும்
ஊருணி நீர் போல் பயன்பட
உள்ளம் விரும்ப வேண்டும்
பயன் செய்ய நினைக்கும் நல்லவர்
செல்வம் பலருக்கும் பயன்படும்
பயன் செய்து வாழ்வதே செல்வத்தைப்
பயன்படுத்தும் முறையாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்