தாய்லாந்தில் ஒரு நீருற்று! அந்த நீருற்று அழகாக இருக்கும்! தினமும் அதைக்காண நிறைய மக்கள் வருவர். அதில் கடல் ஆமைகளை வளர்த்தனர். தாய்லாந்து மக்களுக்கு ஒரு விநோதமான நம்பிக்கை! அதாவது தான் நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் சில்லரைக் காசுகளை தண்ணீரில் எறிவது என்பதுதான்! நீரூற்றில் இருந்த "பெண் கடல் ஆமை' இவற்றை விழுங்கியிருக்கிறது! ஆமையின் உடல் நிலை சரியில்லாததைக் கண்டனர் அங்குள்ளோர். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பார்த்தால்!.....அதன் வயிற்றில் 915 சில்லறைக் காசுகள்! சர்ஜன்கள் அதிர்ந்தனர். ஒரு வழியாக எல்லாவற்றையும் எடுத்துவிட்டனர். இப்போது அந்த ஆமை நலம்!...அதற்குச் செல்லமாகப் பெயர் வைத்துவிட்டார்கள்! என்ன பேர் தெரியுமா? "பேங்க்!' ......அது சரி, டாக்டர் ஃபீஸ்? அந்தச் சில்லறைதான் என்கிறது போலும் அந்த ஆமை!