"குடுகு டெ'ன்று விரைந்து அணில்
தோப்புக் குள்ளே ஓடும்
"கிடுகி டெ'ன்று மரத்தில் ஏறும்
கிளையில் ஊஞ்சம் ஆடும்!
பழுத்த பழத்தைப் பாதி தின்னும்
மீதி கீழே போடும்
விழுந்த பழங்கள் மரத்தின் அடியில்
புழுதி படிந்து கிடக்கும்!
சிறுவர் நாங்கள் கூடிச் செல்வோம்
சிந்தை மகிழ்ந்து அவற்றைப்
பொறுக்கி வாய்க்கால் நீரில் கழுவி
ஆசை யாரப் புசிப்போம்!
அணிலின் உறவும், கடித்த பழமும்
எமக்கு இனிக்க உதவும்
புனிதத் தோப்பும் நல்வாய்க் காலும்
கிராமப் பொக்கிஷங்கள்!
-அழகு. இராமானுஜன்