(பொருட்பால் - அதிகாரம் 71 - பாடல் 5 )
குறிப்பின் குறிப்பு உணராவாயின் உறுப்பினுள்
என்ன பயத்தலோ கண்.
- திருக்குறள்
ஒருவர் முகத்தைப் பார்த்ததும்
உள்ளத்தில் உள்ள உணர்வினைத்
தெரிந்து கொள்ளும் தன்மையே
கண்ணுடையோர் நுண்ணறிவு
கண்கள் இருந்தால் போதாது
பார்வையில் நுட்பம் வேண்டுமே
பார்த்ததும் ஒருவரின் எண்ணத்தை
புரிந்து கொள்ள வேண்டுமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்