ராசை கொண்ட நம்பிராஜன் என்பவன் உழைக்காமலே பெரும் செல்வம் சேர்க்க எண்ணினான். அது மட்டுமல்ல....நீண்ட ஆயுளுடன் வாழ அவனுக்கு ஆசை.
அதற்காக ஒரு தேவதையை தினமும் வேண்டிக் கொள்வான்.
ஒரு நாள் தேவதை அவன் முன் தோன்றியது. நம்பிராஜன் தேவதையை நோக்கி, ""தேவதையே, உன்னை ரொம்ப சக்தி வாய்ந்தவள்னு சொல்றாங்க!... பத்துகோடி
பொன்னை எனக்குத் தருவது உனக்குப் பெரிய விஷயமில்லை...இல்லையா?'' என்று கேட்டான்.
""ஆமாம் அது பெரிய விஷயமில்லை....என்னைப் பொறுத்தவரை அது என்னுடைய ஒரு பைசா மாதிரி!''
""அடேங்கப்பா!....அப்பன்னா ஆயிரம் வருஷம்ங்கிறது...உனக்கு எப்படியிருக்கும்?''
தேவதை சிரித்துக் கொண்டு, ""ஆயிரம் வருஷம் என்கிறது எனக்கு ஒரு வினாடி மாதிரி!'' என்றது!
""அப்படீன்னா தேவதையே!.... எனக்கு உன்னுடைய ஒரு பைசாவைத் தாயேன்!''
""இதென்னெ பெரிய விஷயம்!...ஒரு வினாடி காத்திருக்கிறாயா?... தருகிறேன்!''
""சரி'' என்றான் நமபிராஜன் பேராசையுடன்!
தேவதை மறைந்துவிட்டது!
பிறகுதான் நம்பிராஜனுக்கு உறைத்தது!...
"அடாடா! நாம் ஆயிரம் வருஷம் எப்படிக் காத்திருப்பது?' என்று.
மறுநாளிலிருந்து அவன் உழைக்க ஆரம்பித்தான்! அதற்கான பலனும் அவனுக்குக் கிடைத்தது! நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்தான்.