வண்ணக்கோலம் வாசலில் துலங்க
வந்திடும் மார்கழி! - குளிர்தரும்
வெண்பனி மூட்டம் விளைந்த
குளு குளு மார்கழி!
விடியற்காலை கோயில் நடைகள்
திறக்கும் மார்கழி! - அங்கு
இறைவனைக் காண விரைந்து மாந்தர்
செல்லும் மார்கழி!
திருப்பாவை, திரு வெம்பாவைப்
பாக்கள் ஒலிக்கும் மார்கழி!
பக்திப் பெருக்கு, எங்கும் பரவசம்
நிறையும் மார்கழி!
மார்கழி மாதம் நித்தம்
அதிகாலை எழுந்திருப்போம்!
இசையுடன் இறைவன் அருளை -நாம்
இனிதாய் அனுபவிப்போம்!