பொன்மொழிகள்!
* வாழ்க்கையின் நோக்கம் அறவு அல்ல. செயல்தான்!
அதிலிருந்துதான் அறிவு கிடைக்கிறது!
- தாமஸ் ஹக்ஸ்லி
* பணம் உங்களுடைய கஷ்டத்தை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தருகிறது.
- டெனிஸ் வீவர்
* உலகம் ரொம்ப வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது! ஒரு காரியத்தை முடியாது என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேறொருவர் அதைச் செய்து கொண்டிருப்பர்.
* உனக்குத் தெரிந்த விஷயம் பற்றிக் குறைவாகப் பேசு!....
தெரியாத விஷயம் பற்றி எதுவுமே பேசாதே!
- சடி நிக்கோலஸ் கார்னோட்
* சட்டங்களை ஒருமுறை வகுத்து எழுதி வைத்தாகி விட்டதென்றால், அவற்றை மாற்றவே கூடாது என்று பொருளல்ல.
- அரிஸ்டாட்டில்
* கவலை என்பது ஒரு மாதிரியான அச்சம்! எல்லாவிதமான அச்சமும் சோர்வை உண்டாக்கும்.
- பெர்ட்ராண்டு ரஸ்ஸல்
* உண்மை என்பது வீட்டை விட்டுத் தலை நீட்டுவதற்குள்ளாகவே, பொய் உலகத்தைச் சுற்றி வந்துவிடுகிறது. ஆனால் உண்மை மட்டுமே அடையாளம் கண்டுகொள்ளப்படும்!
- யாரோ
* துன்பங்களை பிறரிடம் சொன்னால் மனதுக்கு ஆறுதல் கிடைக்கிறது என்றாலும், கேட்பவர்களில் கேலி செய்பவர்கள்தான் அதிகமாக
இருக்கிறார்கள்.
- கண்ணதாசன்.
* குற்றங்களை மன்னித்து விடுவாய்!
அது தவறல்ல.... ஆனால் மறந்து விடாதே! கற்றுக்கொண்ட பாடங்களை இழந்து விடுவாய்!
- வரிஜீனியா உல்ஃப்.
தொகுப்பு: எல். நஞ்சன், முக்கிமலை.