கடி

"விடை எழுதிட்டு கடைசியிலே எதுக்கு ஆச்சரியக் குறி போட்டே?''"முதல் முதலா சரியான விடை எழுதிட்டேனே''
கடி

* "ஏன் வாழை மரத்து உச்சியைப் பார்த்துக்கிட்டு இருக்கே?''
"அம்மா நுனி இலை அறுத்துக்கிட்டு வரச் சொன்னாங்க''
"அதுக்கு?''
"மரத்து நுனியில் எப்படி ஏறி அறுக்கிறதுன்னு பார்க்கிறேன்''
ஆர்.யோகமித்ரா, சென்னை. 

* "பொங்கலுக்கும் இட்லிக்கும் என்ன வித்தியாசம்?''
"பொங்கலுக்கு லீவு விடுவாங்க....இட்லிக்கு சாம்பார் விடுவாங்க''
வளர்மதிமுத்து, திருச்சிற்றம்பலம். 

* "ஒரே தலைல ரெண்டு மொட்டை!''
"அது எப்படி?''
"போன மாசம் பழனி,....இந்த மாசம் திருப்பதி!''
பர்வதவர்த்தினி, சென்னை. 

* "படம் பார்க்கும்போது வாய் விட்டு அழுதுட்டேன்!...''
"எந்த இடத்துலே?''
"உட்கார்ந்திருந்த இடத்துலேயேதான்!''
ஜி.சுந்தரராஜன், 
1, அன்னப்பபிள்ளை சந்து, 
எஸ்.என்.புரம் ரோடு, திருத்தங்கல். 

* "விடை எழுதிட்டு கடைசியிலே எதுக்கு ஆச்சரியக் குறி போட்டே?''
"முதல் முதலா சரியான விடை எழுதிட்டேனே''
ஏ.நாகராஜன், பம்மல்.

* "எதுக்கு எப்பவும் ஜீன்ஸ் போட்டுக்கறே?''
"அறிவாளியா ஆகறதுக்குத்தான்!''
"என்ன உளர்றே?''
"அறிவாளியா இருக்கறதுக்கு ஜீன்ஸ்தான் காரணமாமே!''
எம்.அசோக்ராஜா, 
3/14ஏ, அரவக்குறிச்சிப்பட்டி, 
அசூர், திருச்சிராப்பள்ளி - 620015.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com