கி.வா.ஜ. வைச் சந்தித்துப் பேசி விட்டு விடைபெற்ற வள்ளியப்பா வாசலிலிருந்த டாக்ஸியில் ஏறினார். டாக்ஸி ஸ்டார்ட் ஆகவில்லை....மக்கர் செய்தது! வழியனுப்ப வந்த கி.வா.ஜ, ""நான் தள்ளிவிடட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு வள்ளியப்பா, ""வேண்டாங்க....இந்த வயசுலே உங்களுக்கு எதுக்கு சிரமம்?'' என்று கூறினார். அதற்கு கி.வா.ஜ, ""என்ன சார் நான் தள்ளாதவனா?'' என்று கேட்க அங்கு சிரிப்பலை மோதியது!