அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.
-திருக்குறள்
துன்பம் தொடர்ந்து வந்தாலும்
மனம் தளர்ந்து போகாதவன்
எது வந்தாலும் ஏற்றுக் கொள்வான்
எதையும் தாங்கி வென்றிடுவான்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
தாங்கும் சக்தி உள்ளவனைத்
தாக்கும் சக்தி இல்லாமல்
தளர்ந்து சோர்ந்து போய்விடும்.