தேர்வுக் காலம் வந்தது
திகைக்க வேண்டாம் நெஞ்சிலே!
ஆர்வம் கொண்டு கற்பதால்
அடையும் வெற்றி உன்னையே!
படித்து வந்த பாடத்தை
படித்து மீண்டும் பாருங்கள்!
முடித்து வீட்டுப் பாடத்தை
முழுதாய் எழுதிப் பாருங்கள்!
எழுதிப் படித்துப் பார்ப்பதால்
எளிதாய் மனதில் நிற்குமே!
எழுதிப் படித்துப் பார்ப்பதால்
எளிதாய் பெறலாம் வெற்றியே!
இன்று சொன்ன பாடத்தை
இன்றே படித்துப் பாருங்கள்!
இன்றை விட்டால் நாளைக்கு
இன்னும் பாடம் கூடுமே!
வெற்றி உங்கள் கையிலே
வீற்றி ருக்கு காணுங்கள்!
பற்றிக் கொள்ள முயற்சியும்
பயிற்சி யோடு வேணுமே!