காகம்!
எங்கள் வீட்டு முற்றத்தில்
எட்டிப் பார்த்தது ஒரு காகம்!
அங்கும் இங்கும் தலை ஆட்டி
அழகாய்க் கண்ணை உருட்டியதே!
"அம்மா சாதம் போடம்மா'
என்றே அதுவும் கேட்கிறதோ?
சும்மாச் சும்மாச் சுற்றி வந்து
எத்தனை முறைதான் கத்துவது?
சின்னக் கண்ணன் போய்ச் சொன்னான்
சிரித்துக் கொண்டே அம்மாவும்
அன்னம் சொஞ்சம் நெய்யோடு
அருகே கொண்டு போய்ப் போட்டாள்!
எங்கங்கிருந்தோ காகங்கள்
எத்தனை வந்தன சிறகடித்து!
எங்கள் வீட்டு முற்றத்தில்
எட்டிப் பார்த்த முதல் காகம்
கொஞ்சம் சோறும் கிட்டாமல்
குண்டுக் கண்ணால் பார்த்ததுவே!
குஞ்சுக் கண்ணன் கை முறுக்கைக்
குறியாய்க் கவ்விப் போனதுவே!
- சுப்ர பாலன்