உடலையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனமாக்கும் எதையும் நஞ்சென ஒதுக்கி விடுங்கள்!
கோழைகளே பாபம் புரிபவர்! தைரியமுடையோர் ஒருக்காலும் பாபம் செய்யார்!
அன்பாலும், உண்மையை நாடும் பேரவாவாலும், முழு ஆத்ம சக்தியாலும்தான் பெருங்காரியங்கள் யாவும் நிறைவேறுகின்றன!
உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்!
இவ்வுலகில் தோன்றிய நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள்! இல்லையேல் உங்களுக்கும், மரங்கள், கற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்!
முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! எஜமானனாகும் தகுதி பின்னர் தானே வரும்!
நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தாலன்றி உமது மனதில் உள்ளதை வெளியிட வேண்டாம்!
சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை! கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடுதலையும் அறிவான்.
பிறருக்காகச் செய்யும் மிகச் சிறிய முயற்சியும் உள்ளிருக்கும் சக்தியை எழுப்புகிறது. பிறருக்காக மிகச் சிறு நன்மையை எண்ணுவதும் வரவர சிங்கத்தின் பலத்தை நெஞ்சிற்குள் ஊட்டும்!