பொருட்பால் - அதிகாரம் 90 - பாடல் 6
- திருக்குறள்
நெருப்பு சூழ்ந்து சுட்டாலும்
பிழைத்துக் கொள்ள வாய்ப்புண்டு
தூய்மையான சான்றோர்க்குப்
பிழைகள் செய்யக் கூடாது
மீறிப் பிழைகள் செய்தவர்கள்
மீளமுடியாமல் தவிப்பார்கள்
தப்பிப் பிழைக்க வழியின்றித்
தண்டனை பெற்று வருந்துவார்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்