பொருட்பால் - அதிகாரம் 73 - பாடல் 6
வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
- திருக்குறள்
நெஞ்சில் துணிவு இல்லாதவர்
வீரன் என்ற போர்வையில்
வாளைக் கையில் வைத்துக் கொண்டு
வாழ்ந்து பயனில்லையே
நுண்ணறிவு படைத்தவர்கள்
நிறைந்திருக்கும் சபையிலே
பேச அச்சம் கொள்பவர்
நூல்கள் கற்றுப் பயனில்லை.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்